Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீடு மீது ரூ.1.50 கோடி வங்கி கடன் வாங்கி மோசடி செய்தவர் கைது

வீடு மீது ரூ.1.50 கோடி வங்கி கடன் வாங்கி மோசடி செய்தவர் கைது

வீடு மீது ரூ.1.50 கோடி வங்கி கடன் வாங்கி மோசடி செய்தவர் கைது

வீடு மீது ரூ.1.50 கோடி வங்கி கடன் வாங்கி மோசடி செய்தவர் கைது

ADDED : ஜூன் 25, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
அம்பத்துார், அம்பத்துார், ஒரகடம், அண்ணா நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் விஜயகுமாரி, 58. இவர், கடந்த மார்ச் 25ம் தேதி, ஆவடி போலீஸ் கமிஷனரக மத்திய குற்றப்பிரிவில், புகார் ஒன்றை அளித்தார்.

புகாரில் கூறியிருந்ததாவது:

எனக்கு, மேற்கண்ட முகவரியில், 6,650 சதுர அடி இடத்தில், முக்கால் கிரவுண்டு வீடும், மீதமுள்ள இடம் காலியாகவும் இருந்தது. கடந்த, 2012ல் சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், துளசிராமன், ராஜன் ஆகியோர், 'வாழ்க வளமுடன்' என்ற பெயரில் கட்டுமான தொழில் செய்து வருவதாகக் கூறி அறிமுகமாகினர்.

அவர்கள், நான் குடியிருக்கும் பழைய வீட்டை இடித்து, 5 வீடுகள் கட்டிக் கொடுத்து, அதற்கான முன் பணமாக, 30 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறினர்.

நான், அவர்களை நம்பி, என் வீட்டின் அசல் ஆவணத்தை, அவர்களிடம் கொடுத்தேன். அதன் பிறகு, 6 மாதம் கழித்து, புதிய வீட்டு வேலை துவங்க, கிண்டியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடன் பெற, என்னை காரில் அழைத்துச் சென்று கையெழுத்து பெற்றனர்.

ஆனால், பல மாதமாகியும் வீடு கட்டும் பணியை துவங்கவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள, 'வாழ்க வளமுடன்' பில்டர்ஸ் நிறுவனத்தில் சென்று விசாரித்த போது, அவர்கள் அங்கு இல்லை என தெரிந்தது.

அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு, மேற்கண்ட வங்கி தரப்பில் இருந்து, ஹரிச்சந்திரன் என்பவர், உங்கள் வீட்டை, 92 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். அதற்கான வட்டியுடன் சேர்த்து, 1.50 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்னனர்.

அவரை தேடி சென்ற போது, அவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேற்கண்டவர்கள் என்னை ஏமாற்றி, என் வீட்டின் மீது கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.

புகாரை விசாரித்த போலீசார், 14 ஆண்டுகளாக தலைமறைவானவர்களில், கொடுங்கையூர், கட்டபொம்மன் பிரதான சாலையைச் சேர்ந்த துளசிராமன், 44, என்பவரை, நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us