Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கடையில் புகுந்து 20 போன் திருடியோர் கைது

கடையில் புகுந்து 20 போன் திருடியோர் கைது

கடையில் புகுந்து 20 போன் திருடியோர் கைது

கடையில் புகுந்து 20 போன் திருடியோர் கைது

ADDED : மார் 15, 2025 12:10 AM


Google News
Latest Tamil News
முகப்பேர்முகப்பேர் கிழக்கு, பாரி சாலையைச் சேர்ந்தவர் மொய்தீன், 45. இவர், மொபைல் போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 12ம் தேதி நள்ளிரவு, இவரது கடையின் பூட்டை உடைத்து, விலை உயர்ந்த 20 மொபைல் போன்கள் மற்றும் 45,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இது குறித்து, திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இதில், திருட்டில் ஈடுபட்ட ராயப்பேட்டை, துவாரகா நகரைச் சேர்ந்த ராஜேஷ், 26, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த் அபிஷேக், 21, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவாக உள்ள, மற்றொருவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us