Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூதாட்டியின் நகை திருட்டு பணிப்பெண் கைது 

மூதாட்டியின் நகை திருட்டு பணிப்பெண் கைது 

மூதாட்டியின் நகை திருட்டு பணிப்பெண் கைது 

மூதாட்டியின் நகை திருட்டு பணிப்பெண் கைது 

ADDED : ஜூன் 09, 2024 01:14 AM


Google News
மாம்பலம்:தி.நகர், கோபால் தெருவைச் சேர்ந்தவர் அமிர்தவல்லி, 83. தனியாக வசித்து வருகிறார்.

இவரை கவனித்து கொள்வதற்கு, அதே பகுதியைச் சேர்ந்த வளர்மதி,49, சத்யா,52 ஆகியோர் பணிப் பெண்களாக வேலை பார்க்கின்றனர்.

கடந்த 22ம் தேதி, சவுகார்பேட்டையை சகோதரர் வரதராஜூலு,63, என்பவர், அமிர்தவல்லியை பார்க்க வீட்டிற்கு வந்தார். அப்போது பீரோவில் இருந்த நகையை சார்பார்த்தார். அதில் 8 சவரன் நகை மாயமாகி இருந்தது.

வீட்டின் பணிப்பெண்கள் வளர்மதி, சத்யாவிடம் விசாரித்தார். அவர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டனர்.

சந்தேகமடைந்த வரதராஜுலு, மாம்பலம் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையில் சத்யா தலைமறைவாகி விட்டார்.

நேற்று அவரை போலீசார் கைது செய்தபோது, சிறுகச் சிறுக நகை திருடியதை ஒப்புக்கொண்டார். திருடப்பட்ட நகை அவரிடம் இருந்து மீட்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us