Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ லாரி - தொழிற்சாலை பஸ் மோதி விபத்து: 14 பேர் காயம்

லாரி - தொழிற்சாலை பஸ் மோதி விபத்து: 14 பேர் காயம்

லாரி - தொழிற்சாலை பஸ் மோதி விபத்து: 14 பேர் காயம்

லாரி - தொழிற்சாலை பஸ் மோதி விபத்து: 14 பேர் காயம்

ADDED : மார் 14, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
திருவாலங்காடு, திருவள்ளூர், மப்பேடு சமத்துவபுரத்தில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று மதியம் பணி முடிந்து, திருத்தணி பகுதி ஊழியர்கள் தொழிற்சாலை பேருந்தில், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

பேருந்தை, ஆர்.கே.பேட்டை, ராமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அருண், 38, என்பவர் ஓட்டினார். கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடுகுப்பம் அருகே சென்றபோது, திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த லாரி, பேருந்து மீது மோதியது.

இதில், ஓட்டுநர் மற்றும் பேருந்தில் இருந்த புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் காயமடைந்தனர். லாரி டிரைவர் வெங்கடேசன் என்பவரும் படுகாயமடைந்தார். கனகம்மாசத்திரம் போலீசார், 14 பேரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்து, விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us