/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பீர் குடித்தபடி காரில் பயணம் சட்ட கல்லுாரி மாணவர் கைது பீர் குடித்தபடி காரில் பயணம் சட்ட கல்லுாரி மாணவர் கைது
பீர் குடித்தபடி காரில் பயணம் சட்ட கல்லுாரி மாணவர் கைது
பீர் குடித்தபடி காரில் பயணம் சட்ட கல்லுாரி மாணவர் கைது
பீர் குடித்தபடி காரில் பயணம் சட்ட கல்லுாரி மாணவர் கைது
ADDED : ஆக 03, 2024 12:35 AM

துரைப்பாக்கம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், ஒரு காரின் கூரையை திறந்து பீர் குடித்தபடி வாலிபரும், இளம்பெண்ணும் பயணித்தனர்.
அவர்கள் பெருங்குடியை சேர்ந்த சஞ்சய், 23, என்பதும், அவர், தனியார் கல்லுாரியில் ஐந்தாம் ஆண்டு சட்டம் படித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து துரைப்பாக்கம் போலீசார், பொதுமக்கள் பாதையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது, குடித்துவிட்டு பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடப்பது ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிந்தனர்.
சஞ்சய்யை கைது செய்த போலீசார், அந்த காரை பறிமுதல் செய்தனர்.