Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாடிப்படியை இடித்த 'ஹவுஸ் ஓனர்' வாடகை பாக்கியால் ஆத்திரம்

மாடிப்படியை இடித்த 'ஹவுஸ் ஓனர்' வாடகை பாக்கியால் ஆத்திரம்

மாடிப்படியை இடித்த 'ஹவுஸ் ஓனர்' வாடகை பாக்கியால் ஆத்திரம்

மாடிப்படியை இடித்த 'ஹவுஸ் ஓனர்' வாடகை பாக்கியால் ஆத்திரம்

ADDED : ஜூன் 20, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், விளக்கடி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு, கலெக்டர் அலுவலக வளாகம், வானவில் நகரிலும் சொந்த வீடு உள்ளது. இவ்வீட்டின் மாடி குடியிருப்பில், வேணுகோபால் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார்.

வேணுகோபால் சில மாதங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே முடங்கியுள்ளார். இதனால், வாடகை செலுத்த முடியவில்லை.

வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர் சீனிவாசன் கூறியும், வேணுகோபால் காலி செய்யவில்லை. ஆத்திரம் அடைந்த சீனிவாசன், நேற்று முன்தினம் வீட்டின் மாடிப்படியை, 'பொக்லைன்' இயந்திரத்தின் உதவியுடன் இடித்து உள்ளார்.

இதனால், மாடி வீட்டில் இருந்த வேணுகோபால் குடும்பத்தினர், வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே தவித்தனர்.

இதையடுத்து வேணுகோபால், காஞ்சிபுரம் போலீசுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து, மாடி வீட்டில் இருந்தவர்களை கயிறு கட்டியும், ஏணியை பயன்படுத்தியும், பத்திரமாகமீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து, காஞ்சிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us