Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'பிஸ்கட்'டில் கஞ்சா இருவர் சிக்கினர்

'பிஸ்கட்'டில் கஞ்சா இருவர் சிக்கினர்

'பிஸ்கட்'டில் கஞ்சா இருவர் சிக்கினர்

'பிஸ்கட்'டில் கஞ்சா இருவர் சிக்கினர்

ADDED : ஜூன் 02, 2024 12:17 AM


Google News
புழல், புழல் சிறையில், ஆர்.கே.நகரைச் சேர்ந்த சக்திவேல் என்ற விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம், அதே பகுதி யைச் சேர்ந்த ஜீனத், 40 என்பவர், அவரை பார்க்க சென்ற போது, 'பிஸ்கட்' பாக்கெட்டுகளை கொடுக்க முயன்றார்.

கண்காணிப்பு பணியில் இருந்த சிறை காவலர், சோதனை செய்த போது, அதில் மறைத்து வைத்திருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், குரோம்பேட்டையைச் சேர்ந்த சாலமன் என்ற கைதியை பார்க்க, தயாள் ராஜ், 25 என்பவர் வந்தார்.

இவர் கொண்டுவந்த 'பிஸ்கட்' கவரை, போலீசுக்கு பயந்து கீழே போட்டு தப்பினார். அதில் 40 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது.

சிறைக்காவலர் அளித்த புகாரின்படி, புழல் போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us