Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுமியை கர்ப்பமாக்கிய எலக்ட்ரீஷியன் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய எலக்ட்ரீஷியன் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய எலக்ட்ரீஷியன் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய எலக்ட்ரீஷியன் கைது

ADDED : ஜூன் 07, 2024 12:21 AM


Google News
வடபழனி, கே.கே., நகரைச் சேர்ந்தவர், 15 வயது சிறுமி. இவர், 10ம் வகுப்பு தேர்வு முடித்து, வீட்டில் உள்ளார். சிறுமிக்கு, இரண்டு மாதங்களாக மாதவிடாய் வராததால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த 4ம் தேதி அவரது தாய் அழைத்துச் சென்றார்.

மருத்துவ பரிசோதனையில் சிறுமி, 16 வாரம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில், கர்ப்பத்திற்கு காரணம், குடும்பத்திற்கு பழக்கமான எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் அசோக்குமார், 29, என்பது தெரிந்தது.

சிறுமியின் புகைப்படத்தை தவறாக 'மார்பிங்' செய்து, அவரை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரையடுத்து, வடபழனி மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அசோக்குமார், 29, என்பவரை, நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us