ADDED : ஜூலை 09, 2024 12:16 AM
தாம்பரம், குரோம்பேட்டை அடுத்த கக்கன்சாவடியைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள், 80; அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று பூ வாங்க தாம்பரம் மார்க்கெட்டிற்கு செல்ல, அரசு காசநோய் மருத்துவமனை அருகே, ஜி.எஸ்.டி., சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது, தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு சென்ற, தடம் எண் 500 அரசு பேருந்து மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து போலீசார்விசாரிக்கின்றனர்.