ADDED : ஜூன் 08, 2024 12:32 AM
திருவொற்றியூர், ந்தமல்லி - திருவொற்றியூர் நோக்கி செல்லும், தடம் எண் - 101 மாநகர பேருந்து, நேற்று முன்தினம் இரவு, திருவொற்றியூர் நோக்கிச் சென்றது.
திருவொற்றியூர், டோல்கேட் சந்திப்பு அருகே பேருந்து சென்றபோது, சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது மோதியது.
இதில், நிலைதடுமாறி விழுந்த முதியவர் மீது, பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்தவர் திருவொற்றியூர், தியாகராயபுரத்தைச் சேர்ந்த சுதர்சன், 64, என்பது தெரியவந்தது.
வழக்கு பதிவு செய்த போலீசார், மாநகர பேருந்து ஓட்டுனர் சந்திரசேகர், 44, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.