போதை ஊசி இளைஞருக்கு மூச்சு திணறல்
போதை ஊசி இளைஞருக்கு மூச்சு திணறல்
போதை ஊசி இளைஞருக்கு மூச்சு திணறல்
ADDED : ஜூன் 19, 2024 12:22 AM
ஐஸ் ஹவுஸ்,
திருவல்லிக்கேணி, கஜபதி தெரு, முனுசாமி நகரைச் சேர்ந்தவர் கிஷோர், 24. இவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி சுடுகாட்டில், குழி தோண்டும் வேலை செய்து வருகிறார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கிஷோர், நேற்று முன்தினம் இரவு, சுடுகாட்டில் தன் வலது கையில், அவரே போதை ஊசி போட்டுக் கொண்டார். பின், சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஆட்டோவில் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.