Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உயிர்பலி வாங்க காத்திருக்கும் வடிகால் தேசிய நெடுஞ்சாலை துறை அலட்சியம்

உயிர்பலி வாங்க காத்திருக்கும் வடிகால் தேசிய நெடுஞ்சாலை துறை அலட்சியம்

உயிர்பலி வாங்க காத்திருக்கும் வடிகால் தேசிய நெடுஞ்சாலை துறை அலட்சியம்

உயிர்பலி வாங்க காத்திருக்கும் வடிகால் தேசிய நெடுஞ்சாலை துறை அலட்சியம்

ADDED : ஜூன் 17, 2024 02:14 AM


Google News
Latest Tamil News
நொளம்பூர்:தாம்பரம் -- மதுரவாயல் புறவழிச்சாலையின் நொளம்பூர் அணுகு சாலை மழைநீர் வடிகால், திறந்த நிலையில் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைதுறை பராமரிப்பில் உள்ள இந்த வடிகாலில், கடந்த 2020 டிச., 6ம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்ற அயனம்பாக்கத்தைச் சேர்ந்த தாய், மகள் தடுமாறி விழுந்து உயிரிழந்தனர்.

இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், மழை நீர் வடிகாலில் மேல் மூடி அமைக்கப்பட்டது.

ஆனால், மழை நீர் வடிகாலின் இன்னொரு பகுதியில், மேல் மூடி அமைக்கப்படாமல் உள்ளது.

இதில், முகப்பேர் மேற்கு பிரதான சாலை மற்றும் அணுகு சாலை சந்திப்பு சுரங்கப்பாதை அருகே, மழைநீர் வடிகால் சுவர் இடிந்து விழுந்து சாலை மட்டத்தில் உள்ளது.

இதனால், இவ்வழியாகச் செல்லும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அத்துடன் மழைக்காலத்தில் மழைநீர் சாலையில் வெளியேறவும் காரணமாக உள்ளது. எனவே, இப்பகுதியில் முறையாக மழைநீர் வடிகால் அமைத்து, மேல் மூடி அமைக்க, தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us