/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போலி நகை அடகு வைத்த தில்லாலங்கடி நபர் கைது போலி நகை அடகு வைத்த தில்லாலங்கடி நபர் கைது
போலி நகை அடகு வைத்த தில்லாலங்கடி நபர் கைது
போலி நகை அடகு வைத்த தில்லாலங்கடி நபர் கைது
போலி நகை அடகு வைத்த தில்லாலங்கடி நபர் கைது
ADDED : ஜூலை 19, 2024 12:14 AM
கோயம்பேடு, கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ரோகிணி திரையரங்கம் எதிரே, மணப்புரம் கோல்டு லோன் நிறுவனம் உள்ளது.
கடந்த மே 20ம் தேதி, இந்த நிறுவனத்தில், ஜாபர்கான்பேட்டை நாகப்பன் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுனர் செந்தில் ராஜ், 46, என்பவர், 15 கிராம் செயினை அடமானம் வைத்து, 80,000 ரூபாய் பெற்றுச் சென்றுள்ளார்.
மே 25ம் தேதி, நிறுவனத்தின் கணக்கு தணிக்கை நடந்த போது, செந்தில் ராஜ் அடமானம் வைத்தது போலி நகைகள் என தெரிந்தது.
இதையடுத்து, நிறுவனத்தின் மேலாளர் பிரபாகரன், 28, என்பவர், செந்தில் ராஜை மொபைல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, பணத்தை கொடுத்து நகையை திரும்பப் பெறுவதாக கூறியுள்ளார்.
ஆனால், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து, கடந்த 16ம் தேதி பிரபாகரன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த கோயம்பேடு போலீசார், நேற்று முன்தினம் செந்தில் ராஜை கைது செய்தனர்.