Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

ADDED : ஆக 07, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
மணப்பாக்கம், ஆலந்துார் மண்டலம், மணப்பாக்கம் பகுதியில், பிரதான சாலையை ஒட்டி திருக்குளம் அமைந்துள்ளது. இக்குளத்தின் கரையை ஆக்கிரமித்து, சிலர் வீடு கட்டி வசித்து வந்தனர்.

கடந்தாண்டு புயல் பாதிப்பிற்குப் பின், மணப்பாக்கம் திருக்குளத்தின் கரைகளில் கட்டப்பட்ட வீடுகளை, மாநகராட்சி அகற்றியது. இதில் சிலர் நீதிமன்றம் சென்றதால், வீடுகளை அகற்றும் பணி தடைபட்டது.

இந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

இதையடுத்து, மண்டல உதவி கமிஷனர் ஸ்ரீனிவாசன், மண்டல செயற்பொறியாளர் பாண்டியன், உதவி செயற்பொறியாளர் மணிமாறன் முன்னிலையில், திருக்குளக்கரையில் கட்டப்பட்டிருந்த வீடுகளை, மாநகராட்சி ஊழியர்கள் 'பொக்லைன்' இயந்திரம் உதவியுடன் இடித்தனர்.

இருந்தும் ஒருவர், வீட்டில் இருந்து வெளியே வர மறுத்தார்.

அவரை போலீசார் குண்டுக்கட்டாக வெளியேற்றி வீட்டை அகற்றினர். இந்த வகையில் நேற்று, ஒன்பது வீடுகள் அகற்றப்பட்டன. அங்கு வசித்தவர்கள் தற்காலிகமாக சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us