ADDED : ஜூன் 24, 2024 01:53 AM
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, கிரே நகரைச் சேர்ந்தவர் தேன்மெயர், 30. இவர், அங்குள்ள பரவத் என்பவரின் வீட்டில் தங்கியிருந்து, கார்பென்டராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் அங்கு சென்ற நால்வர், 'உன் முதலாளியின் மொபைல் போன் எண்ணை கொடு' என்றனர். அவர், எனக்கு தெரியாது எனக்கூறி உள்ளார்.
ஆத்திரமடைந்த, அந்த நால்வரில் ஒருவர், கத்தியால், தேன்மெயரின் தலையில் வெட்டினார். பின், அங்கிருந்து தப்பி சென்றனர். படுகாயமடைந்த அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.