Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் தேங்கி பாதிப்

குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் தேங்கி பாதிப்

குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் தேங்கி பாதிப்

குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் தேங்கி பாதிப்

ADDED : ஜூன் 04, 2024 12:32 AM


Google News
Latest Tamil News

குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் தேங்கி பாதிப்பு


பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 210 பிளாக்குகள் உள்ளன. ஒவ்வொரு பிளாக்குக்கும் இடையில், 15 அடி அகலத்தில் காலி இடம் உள்ளது.

இதில், 6, 7 மற்றும் 18, 19 பிளாக்குகள் இடையே உள்ள காலி இடத்தில், பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி உள்ளது. குழாய் அடைப்பால், காலி இடத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

கொசு தொல்லை அதிகரிப்பதால், இரவில் துாக்கத்தை தொலைக்கிறோம். தோல் நோய், சுவாச பிரச்னை ஏற்படுகிறது. வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பிரச்னையை யார் தீர்ப்பது?

- பகுதி மக்கள், பெரும்பாக்கம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us