Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாடிப்படியில் தவறி விழுந்த குழந்தை மரணம்

மாடிப்படியில் தவறி விழுந்த குழந்தை மரணம்

மாடிப்படியில் தவறி விழுந்த குழந்தை மரணம்

மாடிப்படியில் தவறி விழுந்த குழந்தை மரணம்

ADDED : ஜூன் 19, 2024 12:27 AM


Google News
பள்ளிக்கரணை, மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி பவித்ரா. தம்பதியருக்கு 7 வயதில் மிருதுளா, மூன்றரை வயதில் லிபின் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 13ம் தேதி குழந்தை லிபின், வீட்டின் மாடிப்படியிலிருந்து தவறி கீழே விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின், மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி குழந்தை லிபின் நேற்று காலை உயிரிழந்தான். பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us