Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விளையாடுவது போல் நடித்து பைக் திருடிய சிறுவர்கள் சிக்கினர் போதை பழக்கத்தால் தடம் மாறிய அவலம்

விளையாடுவது போல் நடித்து பைக் திருடிய சிறுவர்கள் சிக்கினர் போதை பழக்கத்தால் தடம் மாறிய அவலம்

விளையாடுவது போல் நடித்து பைக் திருடிய சிறுவர்கள் சிக்கினர் போதை பழக்கத்தால் தடம் மாறிய அவலம்

விளையாடுவது போல் நடித்து பைக் திருடிய சிறுவர்கள் சிக்கினர் போதை பழக்கத்தால் தடம் மாறிய அவலம்

ADDED : ஜூன் 12, 2024 12:26 AM


Google News
கொளத்துார், கொளத்துார், ராஜமங்கலம் சுற்றுவட்டாரங்களில், வீடுகளின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போயின.

கடந்த சில நாட்களுக்கு முன்பும், கொளத்துார், செல்வி நகர், 5வது தெருவைச் சேர்ந்த சுப்ரமணி, 65, என்பவரின், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர் திருடு போனது. இது குறித்து, ராஜமங்கலம் போலீசார் விசாரித்தனர்.

போலீசார், சம்பவம் நடந்த இடம் முதல் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.

அதில், 'திருடப்பட்ட ஸ்கூட்டர் அருகே விளையாடுவது போல் நடித்து, ஆள்நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தில், வாகனத்தை திருடி செல்வது' தெரிந்தது.

இதில், பாடி பகுதியைச் சேர்ந்த, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 17 வயது சிறுவன் சிக்கினான். அவனிடம் நடத்திய விசாரணையில், திருமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், முகப்பேரைச் சேர்ந்த, 16 வயது சிறுவர்கள் இருவர் என, நான்கு பேர் சிக்கினர்.

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி, இருசக்கர வாகனங்களை திருடி, அதன் பாகங்களை தனித்தனியாக பிரித்து, விற்று பணம் பார்த்து வந்துள்ளனர்.

மேலும், அதில் கிடைக்கும் பணத்தில் பல்வேறு வகையில் உல்லாசமாக இருந்துள்ளனர் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். அவர்களிடம் இருந்து இரு 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர்கள், ஒரு பஜாஜ் பல்சர் பைக் என, மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us