/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முருகப்பெருமான் கோவில்களில் ஆடி கிருத்திகை கோலாகலம் முருகப்பெருமான் கோவில்களில் ஆடி கிருத்திகை கோலாகலம்
முருகப்பெருமான் கோவில்களில் ஆடி கிருத்திகை கோலாகலம்
முருகப்பெருமான் கோவில்களில் ஆடி கிருத்திகை கோலாகலம்
முருகப்பெருமான் கோவில்களில் ஆடி கிருத்திகை கோலாகலம்

வடபழனி
வடபழனி ஆண்டவர் கோவிலில் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தன. காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை சிறப்பு பூஜைகள்மற்றும் பல்வேறு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வல்லக்கோட்டை
ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, கோ பூஜை, மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. ரத்தினங்கி சேவை அலங்காரத்தில், உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குமரகோட்டம்
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கும், உற்சவர் முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருப்போரூர்
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் நடந்தன.