Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பால் குடித்த குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு

பால் குடித்த குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு

பால் குடித்த குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு

பால் குடித்த குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு

ADDED : ஜூன் 26, 2024 12:25 AM


Google News
ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம், நேரு நகரைச் சேர்ந்தவர் மணி பிரபு, 30; உணவு டெலிவரி ஊழியர். இவர், மனைவி மற்றும் குழந்தையுடன் வண்டலுாரில் உள்ள மாமா வீட்டிற்கு சென்று, நேற்று மாலை வீடு திரும்பினார்.

பின், அவரது மனைவி ஜெயலட்சுமி, ஒன்றரை வயது பெண் குழந்தையான மிகில்யா ஸ்ரீக்கு பாட்டிலில் பால் கொடுத்துள்ளார்.

அப்போது, மூச்சு திணறல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து குழந்தை மயங்கியது.

பெற்றோர், குழந்தையை ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிந்தது.

தகவலறிந்த பட்டாபிராம் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us