/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அண்ணா நகரில் களையெடுப்பு ஒரே நாளில் 4 ரவுடிகள் கைது அண்ணா நகரில் களையெடுப்பு ஒரே நாளில் 4 ரவுடிகள் கைது
அண்ணா நகரில் களையெடுப்பு ஒரே நாளில் 4 ரவுடிகள் கைது
அண்ணா நகரில் களையெடுப்பு ஒரே நாளில் 4 ரவுடிகள் கைது
அண்ணா நகரில் களையெடுப்பு ஒரே நாளில் 4 ரவுடிகள் கைது
ADDED : ஜூலை 20, 2024 01:11 AM
அண்ணா நகர்:அண்ணா நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட நான்கு காவல் நிலையத்தில், பல்வேறு வழக்கில் தேடப்பட்ட நான்கு ரவுடிகளை, ஒரே நாளில் போலீசார் கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில் துணை கமிஷனர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைத்து, தேடப்படும் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர்.
எண்ணுாரில், 2022ம் ஆண்டு அரும்பாக்கம் ரவுடி உமர் பாஷா என்பவர், முன்பகையால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவரது நினைவு அஞ்சலி, வரும் வாரத்தில் அரும்பாக்கத்தில் நடக்க இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதில், முன்விரோதத்தில் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற கோணத்தில், உமர் பாஷாவின் உறவினர், ரவுடி ரபிக், 24 என்பவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
அதேபோல், சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்து, பல நாட்களாக போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்து வந்த அரும்பாக்கம் புலவர் புகழேந்தி நகரைச் சேர்ந்த ரவுடி சூர்யா, 23 என்பவரை, அரும்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
அண்ணா நகரில் ஒரு கொலை உட்பட ஆறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ரவுடி ஹரி, 22 என்பவரை, அண்ணாநகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இரண்டு கொலை வழக்கு உட்பட 15 வழக்குகளில் தேடப்பட்ட, ரவுடி அப்பு, 35 என்பவரை, அமைந்தகரை போலீசார் நேற்று கைது செய்தனர்.