Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு பஸ் மோதி இளைஞர் பலி

அரசு பஸ் மோதி இளைஞர் பலி

அரசு பஸ் மோதி இளைஞர் பலி

அரசு பஸ் மோதி இளைஞர் பலி

ADDED : மே 18, 2025 09:50 PM


Google News
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை, முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜி, 35.

இவருக்குச் சொந்தமான, 'ஹீரோ ஹோண்டா ஸ்பிலெண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மேட்டுப்பாளையம் பகுதியில் சாலையைக் கடந்து, மதுராந்தகம் நோக்கி வந்துள்ளார்.

அப்போது, சென்னை, கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசு பேருந்து, இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

அதில், ராஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற மதுராந்தகம் போலீசார், ராஜியின் உடலை கைப்பற்றி, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின், அரசு பேருந்தை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us