Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ADDED : மார் 18, 2025 08:58 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு மாசு காட்டுப்பாடு வாரியம் 2024-25ம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருது பள்ளி, கல்லுாரிகள், குடியிருப்பு நலச்சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்பு, புதுமையான பசுமை தயாரிப்பு, பசுமை தொழில் நுட்பத்திற்கான ஆராய்ச்சி, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த பசுமை முதன்மையாளர் விருது, 2024க்கான முன்மொழிவு ஆவணங்களை, செங்கல்பட்டு கலெக்டரிடம், ஏப்., 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us