/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருப்போரூர் கந்தசுவாமி கோவில் திருமண மண்டப பணிகள் தீவிரம் திருப்போரூர் கந்தசுவாமி கோவில் திருமண மண்டப பணிகள் தீவிரம்
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் திருமண மண்டப பணிகள் தீவிரம்
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் திருமண மண்டப பணிகள் தீவிரம்
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் திருமண மண்டப பணிகள் தீவிரம்
ADDED : மே 31, 2025 11:49 PM
திருப்போரூர் திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
அதேபோல், நேரடி போக்குவரத்து வசதி உள்ளதால் கந்தசுவாமி கோவிலில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், இப்பகுதியில் முகூர்த்த நாட்களில், ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன.
இதை கருத்தில் கொண்டு 2.36 கோடி ரூபாயில் திருமண மண்டபம்; 50 லட்சம் ரூபாயில் பக்தர்கள் தங்கும் விடுதி; 49.80 லட்சம் ரூபாயில் பக்தர்கள் ஓய்வுக்கூடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
மேலும், பெரிய அளவில், 500 பேர் அமரும் வகையில், திருமண மண்டபம் கட்டவும், கோவில் இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்கவும், வருமானத்தை அதிகப்படுத்தவும், கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், திருப்போரூர்- திருக்கழுக்குன்றம் சாலை ஒட்டி எடையான்குப்பம் கிராமத்தில், 6.36 கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பணிகள் துவங்கி தீவிரமாக நடந்து வருகின்றன.