Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பழுதடைந்த கழிப்பறை வளாகம் சீரமைக்க மகளிர் வேண்டுகோள்

பழுதடைந்த கழிப்பறை வளாகம் சீரமைக்க மகளிர் வேண்டுகோள்

பழுதடைந்த கழிப்பறை வளாகம் சீரமைக்க மகளிர் வேண்டுகோள்

பழுதடைந்த கழிப்பறை வளாகம் சீரமைக்க மகளிர் வேண்டுகோள்

ADDED : ஜூன் 02, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, பாக்கம் ஊராட்சி உள்ளது.

இப்பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

அம்பேத்கர் நகர் பகுதியில் மகளிர் பயன்பாட்டிற்காக, 12 ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த மகளிர் கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.

அந்த வளாகத்திற்குள் கழிப்பறை, குளியலறை, மின்மோட்டாருடன் நீரேற்றும் அறை, தண்ணீர் தொட்டி மற்றும் துணி துவைக்கும் கல் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

தற்போது, இந்த கழிப்பறை வளாகம் பயன்பாடின்றி பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்குமிடமாக மாறியுள்ளது.

எனவே, இந்த கழிப்பறை வளாகத்தை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மகளிர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us