ADDED : ஜன 07, 2024 12:50 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த, கொக்கிலமேடு மீனவ பகுதி கடற்கரையில், நேற்று காலை 3:30 மணிக்கு, பெண்ணின் உடல் கரை ஒதுங்கியது. அதை கண்ட மீனவர்கள், மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல்தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார், சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.