Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மின்மாற்றியை சுற்றி தேங்கும் தண்ணீர் அகற்றப்படுமா?

மின்மாற்றியை சுற்றி தேங்கும் தண்ணீர் அகற்றப்படுமா?

மின்மாற்றியை சுற்றி தேங்கும் தண்ணீர் அகற்றப்படுமா?

மின்மாற்றியை சுற்றி தேங்கும் தண்ணீர் அகற்றப்படுமா?

ADDED : செப் 23, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
மறைமலை நகர் சிப்காட் பகுதி பெரியார் சாலை பகுதியில், மறைமலை நகர் மின் வாரியம் சார்பில் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு, இந்த மின்மாற்றியில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, இந்த மின்மாற்றியை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின்மாற்றியை சுற்றி தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.முருகன்,

மறைமலை நகர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us