Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மேம்பாலத்தில் வளரும் மரக்கன்றுகள் அகற்றப்படுமா?

 மேம்பாலத்தில் வளரும் மரக்கன்றுகள் அகற்றப்படுமா?

 மேம்பாலத்தில் வளரும் மரக்கன்றுகள் அகற்றப்படுமா?

 மேம்பாலத்தில் வளரும் மரக்கன்றுகள் அகற்றப்படுமா?

ADDED : டிச 02, 2025 05:10 AM


Google News
Latest Tamil News
செ ன்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ள இச்சாலையில் இருந்து பிரிந்து தொழுப்பேடு, ஒரத்தி வழியாக வந்தவாசி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இதில், தொழுப்பேடு பகுதியில் மேம்பாலம் உள்ளது.

இந்த மேம்பாலத்தின் மீதும், பக்கவாட்டிலும் அரச மரக்கன்றுகள், வேப்ப மரக்கன்றுகள் உள்ளிட்டவை வளர்ந்து உள்ளன. இதன் காரணமாக, மேம்பாலம் உறுதித்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது.

மேலும், இந்த சாலையில் அமைக்கப்பட்ட மின்விளக்குகள் எரியாமல், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, இந்த மேம்பாலத்தில் உள்ள மரக்கன்றுகளை வெட்டி அகற்றி, மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- யஷ்வந்த், தொழுப்பேடு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us