/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மனைவியின் தங்கை கணவரை அடித்து கொன்றவர் கைதுமனைவியின் தங்கை கணவரை அடித்து கொன்றவர் கைது
மனைவியின் தங்கை கணவரை அடித்து கொன்றவர் கைது
மனைவியின் தங்கை கணவரை அடித்து கொன்றவர் கைது
மனைவியின் தங்கை கணவரை அடித்து கொன்றவர் கைது
ADDED : பிப் 09, 2024 10:29 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த ஈசூர் பகுதி தேரடி தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 35. இவருக்கு திருமணம் ஆகி, ராஜேஸ்வரி, 34, என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
சரவணன், அப்பகுதியில் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர், மது பழக்கத்திற்கு அடிமையாகி, அடிக்கடி குடும்பத்தில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், சரவணன் மனைவியான ராஜேஸ்வரி, கடந்த 15 நாட்களாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். அதனால், அதே கிராமத்தில் உள்ள தன் அக்காவான புனிதா வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, புனிதாவின் வீட்டிற்கு சென்ற சரவணன், மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு சண்டை போட்டுள்ளார்.
இதில், புனிதாவின் கணவர் வெங்கடேசன், 47, என்பவர், சரவணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனால், இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது, அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து, சரவணனின் பின் தலையில் வெங்கடேசன் அடித்தார், அதில் பலத்த காயமடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற படாளம் போலீசார், சரவணன் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
வெங்கடேசனை கைது செய்த படாளம் போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.