Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் கழிப்பறை திறக்க வலியுறுத்தல்

அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் கழிப்பறை திறக்க வலியுறுத்தல்

அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் கழிப்பறை திறக்க வலியுறுத்தல்

அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் கழிப்பறை திறக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 08, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகே கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 1வது வார்டுக்குட்பட்ட பகுதியில், பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகே 10 ஆண்டுகளுக்கு முன் பொதுக் கழிப்பறை கட்டப்பட்டது. வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். தற்போது கழிப்பறை தண்ணீர் வசதி மற்றும் பராமரிப்பு இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி நிர்வாகத்தினர், கழிப்பறையை சுத்தம் செய்து , தண்ணீர் வசதி ஏற்படுத்தி, நிரந்தர பணியாளர்களை நியமித்து, கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us