Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குண்டும் குழியுமான சாலைகள் இரண்டு கிராமத்தினர் தவிப்பு

குண்டும் குழியுமான சாலைகள் இரண்டு கிராமத்தினர் தவிப்பு

குண்டும் குழியுமான சாலைகள் இரண்டு கிராமத்தினர் தவிப்பு

குண்டும் குழியுமான சாலைகள் இரண்டு கிராமத்தினர் தவிப்பு

ADDED : மார் 21, 2025 02:02 AM


Google News
Latest Tamil News
மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், அஞ்சூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள அஞ்சூர் -- தென்மேல்பாக்கம் சாலை, 4 கி.மீ., துாரம் உடையது.

இந்த சாலையில் 300 மீட்டர் துார சாலை, குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.

இந்த சாலையை பயன்படுத்தி அனுமந்தபுரம், கொண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், அஞ்சூர் வழியாக மகேந்திரா சிட்டியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் தென்மேல்பாக்கம் -- பழைய அஞ்சூர் அருகில், 300 மீட்டர் சாலை மிகவும் சிதிலமடைந்து உள்ளது.

இதனால், ஜல்லி கற்கள் குத்தி வாகனங்கள் பஞ்சராகி, குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

* திருப்போரூர்

திருப்போரூர் அடுத்த பெரிய இரும்பேடு கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள தெருவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது.

அதன் பின், இதுவரை சாலை செப்பனிடப்படாததால், சிமென்ட் சாலை ஆங்காங்கே துண்டித்து, குண்டும் குழியுமாக மாறி உள்ளது. மழை நேரத்தில் சாலையில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம், இந்த தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us