Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மாமல்லை கடலில் மூழ்கி விடுதி ஊழியர் இருவர் பலி

மாமல்லை கடலில் மூழ்கி விடுதி ஊழியர் இருவர் பலி

மாமல்லை கடலில் மூழ்கி விடுதி ஊழியர் இருவர் பலி

மாமல்லை கடலில் மூழ்கி விடுதி ஊழியர் இருவர் பலி

ADDED : ஜன 12, 2024 12:06 AM


Google News
மாமல்லபுரம்:மேகாலயா, ஷில்லாங் பகுதியைச் சேர்ந்தவர் பரங்சிங் தோலிங், 26. அதே மாநிலம், கிழக்கு காஷி ஹில் பகுதியைச் சேர்ந்தவர் லரிசா மெரி லாட்டிங், 22.

இவர்கள் இருவரும், மாமல்லபுரம், தேவனேரி தனியார் கடற்கரை விடுதியில் பணிபுரிந்தனர்.

நேற்று மாலை 3:00 மணிக்கு, இருவரும், அவர்களுடன் பணிபுரியும் மேலும் ஒருவருடன், மாமல்லபுரம் கடலில் குளித்தனர்.

அப்போது, அவர்களை ராட்சத அலை இழுத்துச்சென்றது. அதில், பரங்சிங் தோலிங், கடற்கரை கோவில் பகுதி பாறை கற்கள் இடுக்கில் சிக்கி உயிரிழந்தார்.

லரிசா மெரி லாட்டிங் உடல், கோவில் தெற்கு பகுதியில் கரை ஒதுங்கியது. மற்றொருவரை உயிருடன் மீனவர்கள் மீட்டனர்.

தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார், உடல்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us