Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/திருப்போரூர் சமுதாய கூடம் புதுப்பித்து மேம்படுத்த அடிக்கல்

திருப்போரூர் சமுதாய கூடம் புதுப்பித்து மேம்படுத்த அடிக்கல்

திருப்போரூர் சமுதாய கூடம் புதுப்பித்து மேம்படுத்த அடிக்கல்

திருப்போரூர் சமுதாய கூடம் புதுப்பித்து மேம்படுத்த அடிக்கல்

ADDED : பிப் 25, 2024 01:22 AM


Google News
Latest Tamil News
திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி, 8வது வார்டில், ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி பேரறிஞர் அண்ணா சமுதாய நலக்கூடம் உள்ளது.

இதில், திருப்போரூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தண்டலம், ஆலத்துார், சிறுதாவூர் உள்ளிட்ட கிராம மக்கள், திருமணம், சங்க கூட்டம் என, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

தற்போது, சிமென்ட் பூச்சு உதிர்ந்து பொலிவின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், போதிய இடவசதியும் இல்லை.

எனவே, சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து கூடுதல் கட்டடம் கட்டி மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து மேம்படுத்த, 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். அப்பகுதி 8வது வார்டு கவுன்சிலர் குமரன் அரசு முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் பங்கேற்று, பூமி பூஜைகள் செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us