/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கரும்பாக்கத்தில் அபாய சாலை வளைவு மூன்றடுக்கு வேகத்தடை அவசியம் கரும்பாக்கத்தில் அபாய சாலை வளைவு மூன்றடுக்கு வேகத்தடை அவசியம்
கரும்பாக்கத்தில் அபாய சாலை வளைவு மூன்றடுக்கு வேகத்தடை அவசியம்
கரும்பாக்கத்தில் அபாய சாலை வளைவு மூன்றடுக்கு வேகத்தடை அவசியம்
கரும்பாக்கத்தில் அபாய சாலை வளைவு மூன்றடுக்கு வேகத்தடை அவசியம்
ADDED : செப் 12, 2025 02:11 AM

திருப்போரூர்:கரும்பாக்கத்தில் உள்ள அபாய வளைவில், மூன்றடுக்கு வேகத்தடை மற்றும் எச்சரிக்கை சிக்னல் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை, 27 கி.மீ., துாரம் உடையது. இருவழிப் பாதையாக இருந்த இச்சாலை, 117 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இச்சாலை இடையே கரும்பாக்கம் பகுதி உள்ளது. இப்பகுதி பேருந்து நிறுத்தத்தை ஒட்டி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் இயங்குகின்றன. மேலும் இப்பகுதியில் வணிக கடைகள், வீடுகள் உள்ளன.
இங்கு, அபாய சாலை வளைவு உள்ள நிலையில், விபத்தை தடுக்கும் வகையில் மூன்றடுக்கு வேகத்தடை, எச்சரிப்பு சிக்னல் போன்ற பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஏற்கனவே உள்ள வேகத்தடையும், போதிய பாதுகாப்பானதாக இல்லை.
இதனால், இந்த வளைவு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.குறிப்பாக, பள்ளி மாணவ - மாணவியர் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையை கடக்கும் போது, மரண பயத்தில் கடக்கின்றனர்.
எனவே, விபத்தை தடுக்கும் வகையில், கரும்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அபாய சாலை வளைவு பகுதியில், மூன்றடுக்கு வேகத்தடை மற்றும் எச்சரிக்கை சிக்னல் அமைக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.