Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செய்யூர் அரசு கல்லுாரியில் மூன்றாம்கட்ட கலந்தாய்வு

செய்யூர் அரசு கல்லுாரியில் மூன்றாம்கட்ட கலந்தாய்வு

செய்யூர் அரசு கல்லுாரியில் மூன்றாம்கட்ட கலந்தாய்வு

செய்யூர் அரசு கல்லுாரியில் மூன்றாம்கட்ட கலந்தாய்வு

ADDED : ஜூன் 24, 2025 07:26 PM


Google News
செய்யூர்:புதிதாக துவக்கப்பட்டுள்ள செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மூன்றாம்கட்ட மாணவர் கலந்தாய்வு துவக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் புதிதாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கடந்த மாதம் துவக்கப்பட்டது.

இந்த கல்வி ஆண்டிற்காக ஆங்கில வழி கற்றலில் மூன்று, தமிழ் வழி கற்றலில் இரண்டு என, மொத்தம் ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதற்கு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

இதன்படி, செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு, 9,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், தரவரிசை வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது.

முதலாவதாக சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு, கடந்த 2ம் தேதி துவங்கியது. பின், பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு, கடந்த 6ம் தேதி துவங்கி கடந்த 12ம் தேதி நிறைவடைந்தது.

இதையடுத்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த 16ம் தேதி துவக்கப்பட்டு, 20ம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில் தற்போது மூன்றாம் கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் துவக்கப்பட்டு, தற்போது நடந்து வருகிறது.

200க்கும் மேல் கட் - ஆப் பெற்றுள்ள மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று, மாணவர்களின் மதிப்பெண் தரவரிசைப்படி சேர்க்கை பெறலாம் என, கல்லுாரி முதல்வர் மாதவன் தெரிவித்து உள்ளார்.

கலந்தாய்வுகள் நிறைவடைந்து, வரும் 30ம் தேதி கல்லுாரி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us