Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கடலில் மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து இளைஞர் பலி

கடலில் மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து இளைஞர் பலி

கடலில் மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து இளைஞர் பலி

கடலில் மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து இளைஞர் பலி

ADDED : ஜன 11, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட தழுதாளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரின் மகன் சற்குருநாதன், 27. இவர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர்.

நேற்று காலை 4:00 மணிக்கு, ரவிக்கு சொந்தமான படகில், சற்குருநாதன், ரவி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து, 65, ஆகிய மூவரும், மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர்.

கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், கரை அருகே படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், கடலுக்குள் மூழ்கிய மூவரையும், அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீட்டனர்.

உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சற்குருநாதனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின், உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செய்யூர் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us