ADDED : பிப் 06, 2024 04:33 AM
மறைமலை நகர், : சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்த மூர்த்தி, 25. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு செட்டிபுண்ணியம் ரயில்வே கேட் அருகில் நடந்து சென்றபோது, அந்த வழியே சென்ற மர்ம நபர் மொபைல் போனை பறித்து சென்றார்.
இதுகுறித்து கோவிந்தமூர்த்தி அளித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிங்கபெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 23, என்வரை கைது செய்து விசாரிக்கின்றனர்.