ADDED : ஜூன் 14, 2025 07:52 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த முருக்கஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மாணவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மதுராந்தகம் அடுத்த முருக்கஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த மரிய மெல்வின் மகன் அஜித் மெல்வின், 15. இவர், வீராணக்குன்னம் அருகே உள்ள கே.கே. புதுார் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று வீட்டின் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, மின் மோட்டாரை இயக்க சுவிட்ச் ஆன் செய்து உள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீசார், மாணவின் உடலை மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்