/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ADDED : செப் 14, 2025 02:28 AM

சித்தாமூர்,:பெரியகயப்பாக்கத்தில், செடிகள் வளர்ந்துள்ள அரசு பள்ளி வளாகத்தை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அடுத்த பெரியகயப்பாக்கம் கிராமத்தில், அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
இந்த வளாகம் பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்துள்ளதால், விஷ பூச்சிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது. இதனால், பள்ளி மாணவ - மாணவியருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
எனவே, பள்ளி வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.