/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/எஸ்.பி., குறைதீர் நாள் 19 மனு ஏற்புஎஸ்.பி., குறைதீர் நாள் 19 மனு ஏற்பு
எஸ்.பி., குறைதீர் நாள் 19 மனு ஏற்பு
எஸ்.பி., குறைதீர் நாள் 19 மனு ஏற்பு
எஸ்.பி., குறைதீர் நாள் 19 மனு ஏற்பு
ADDED : ஜன 11, 2024 01:14 AM
செங்கல்பட்டு:இன்சூரன்ஸ் பெயரில் பணத்தை ஏமாற்றிவர் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, எஸ்.பி.யிடம், பொதுமக்கள் நேற்று மனு அளித்தனர்.
செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கத்தில், மாவட்ட காவல் அலுவலகம் உள்ளது. இங்கு, எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
இந்த முகாமில், நில பிரச்னை, இன்ஸ்சூரன்ஸ் பெயரில் பண மோசடி, குடும்ப பிரச்னை உள்ளிட்ட, 19 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் விசாரணை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எஸ்.பி., உத்தரவிட்டார்.