Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நெம்மேலியில் மாணவியர் விடுதி கட்ட ரூ.5.45 கோடி ஒதுக்கீடு

நெம்மேலியில் மாணவியர் விடுதி கட்ட ரூ.5.45 கோடி ஒதுக்கீடு

நெம்மேலியில் மாணவியர் விடுதி கட்ட ரூ.5.45 கோடி ஒதுக்கீடு

நெம்மேலியில் மாணவியர் விடுதி கட்ட ரூ.5.45 கோடி ஒதுக்கீடு

ADDED : செப் 07, 2025 10:32 PM


Google News
மாமல்லபுரம்:நெம்மேலி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு மாணவியர் விடுதி கட்ட, 5.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலி கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு, 2,000த்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இக்கல்லுாரி மாணவ - மாணவியருக்கு விடுதி இல்லாததால், வாடகை கட்டடத்தில் தங்கி படித்து வருகின்றனர். இங்கு, இட நெருக்கடியில் தங்கி உள்ளனர்.

இதனால், மாணவ - மாணவியருக்கு தனித்தனியாக விடுதி கட்டித் தர வேண்டும் என, அரசுக்கு கல்லுாரி நிர்வாகம் பரிந்துரை செய்தது.

தொடர்ந்து மாணவியர் விடுதி கட்ட 1 ஏக்கர் நிலமும், மாணவர்கள் விடுதி கட்ட 0.50 சென்ட் நிலமும் ஒதுக்கீடு செய்து, கல்வித் துறைக்கு வருவாய் துறை வழங்கியது.இதை தொடர்ந்து, 100 மாணவியர் தங்கி படிக்கும் வகையில் நபார்டு திட்டத்தில், மாணவியர் விடுதி கட்ட 5 .45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது விடுதி கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. மேலும், மாணவர்கள் விடுதி கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருவதாக கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us