/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ஹோட்டல் ஊழியர் விபத்தில் இறப்பு குடும்பத்துக்கு ரூ.32.86 லட்சம் இழப்பீடுஹோட்டல் ஊழியர் விபத்தில் இறப்பு குடும்பத்துக்கு ரூ.32.86 லட்சம் இழப்பீடு
ஹோட்டல் ஊழியர் விபத்தில் இறப்பு குடும்பத்துக்கு ரூ.32.86 லட்சம் இழப்பீடு
ஹோட்டல் ஊழியர் விபத்தில் இறப்பு குடும்பத்துக்கு ரூ.32.86 லட்சம் இழப்பீடு
ஹோட்டல் ஊழியர் விபத்தில் இறப்பு குடும்பத்துக்கு ரூ.32.86 லட்சம் இழப்பீடு
ADDED : ஜன 29, 2024 04:10 AM
சென்னை : மடிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில், 'சர்வர்' ஆக பணிபுரிந்தவர் ஜெயமுருகன், 36. கடந்த 2020 நவ., 4ல், 200 அடி ரேடியல் சாலையில், தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
'டாடா ஏஸ்' சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்த ஜெயமுருகன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, நவ., 14ல் உயிரிழந்தார்.
கணவரின் இறப்புக்கு 49 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், ஜெயமுருகனின் மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன் நடந்து. வழக்கை விசாரித்த நீதிபதி, 'கவனக்குறைவு, அதிவேகமாக சரக்கு வாகனத்தை இயக்கியதே, விபத்துக்கு பிரதான காரணம்.
எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 32.86 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும்' என, தீர்ப்பளித்தார்.