Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கீழக்கரணையில் ஏ.டி.எம்., மையம் திறக்க பகுதிவாசிகள் வேண்டுகோள்

கீழக்கரணையில் ஏ.டி.எம்., மையம் திறக்க பகுதிவாசிகள் வேண்டுகோள்

கீழக்கரணையில் ஏ.டி.எம்., மையம் திறக்க பகுதிவாசிகள் வேண்டுகோள்

கீழக்கரணையில் ஏ.டி.எம்., மையம் திறக்க பகுதிவாசிகள் வேண்டுகோள்

ADDED : மே 20, 2025 12:27 AM


Google News
மறைமலைநகர், மறைமலைநகர் நகராட்சி, கீழக்கரணை பகுதியில் 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் ஏ.டி.எம்., மையங்கள் இல்லாததால், பகுதிவாசிகள் நீண்ட துாரம் சென்று பணம் எடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:

கீழக்கரணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரிய செங்குன்றம், மெல்ரோசாபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வாடகைக்கு தங்கி, அங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த பகுதியில், எந்த வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரங்களும் இல்லை. இதனால் பணம் எடுக்க சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் என, 5 கி.மீ., துாரம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் ஓய்வூதிய தொகை பெறுவோர், பெண்கள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே, இந்த பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us