Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அடிப்படை வசதிகள் கேட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்

ADDED : மே 23, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில், ஸ்ரீராம் என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 1,200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு குடியிருப்போர் தங்களுக்கென, நலச்சங்கம் உருவாக்கினர். பின், இந்த நலச்சங்கம் தற்போதுமூன்றாக பிரிந்துள்ளது.

இதில் 'பேஸ் - 3' நலச் சங்கத்தினரை, பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ள நலச் சங்கத்தினர் நீச்சல் குளம், கார் பார்க்கிங், கார் வாஷ் மற்றும் பேட்மின்டன் மைதானம் ஆகியவற்றை உபயோகிக்க அனுமதிக்கவில்லை.

இதைக் கண்டித்து, 'பேஸ் - 3' நலச் சங்கத்தினர், அடிக்குமாடி குடியிருப்பின் நுழைவு வாயிலில், நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இரண்டு சங்கத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த கூடுவாஞ்சேரி போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us