/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குடிக்க பணம் தராத தாய்க்கு தீ வைத்த மகனுக்கு 'காப்பு' குடிக்க பணம் தராத தாய்க்கு தீ வைத்த மகனுக்கு 'காப்பு'
குடிக்க பணம் தராத தாய்க்கு தீ வைத்த மகனுக்கு 'காப்பு'
குடிக்க பணம் தராத தாய்க்கு தீ வைத்த மகனுக்கு 'காப்பு'
குடிக்க பணம் தராத தாய்க்கு தீ வைத்த மகனுக்கு 'காப்பு'
ADDED : செப் 16, 2025 10:58 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு, நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர், 65. இவரது மகன் விக்டர் ராஜேந்திரன், 45. இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன், செங்கல்பட்டு அருகே ஆத்துாரில் வசித்து வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பகுதியிலுள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த இவர், தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டில் உள்ள தாய் எஸ்தர் வீட்டிற்கு வந்த விக்டர் ராஜேந்திரன், அவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
எஸ்தர் பணம் தராததால், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த விக்டர் ராஜேந்திரன், தாய் எஸ்தரை தாக்கி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனால் எஸ்தர் அலறி துடித்த சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
50 சதவீத தீக்காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலின்படி சம்பவ இடத்திற்குச் சென்ற செங்கல்பட்டு நகர போலீசார், விக்டர் ராஜேந்திரனை கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.