Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பராமரிப்பற்ற சிறுவர் பூங்கா சீரமைக்க வேண்டுகோள்

பராமரிப்பற்ற சிறுவர் பூங்கா சீரமைக்க வேண்டுகோள்

பராமரிப்பற்ற சிறுவர் பூங்கா சீரமைக்க வேண்டுகோள்

பராமரிப்பற்ற சிறுவர் பூங்கா சீரமைக்க வேண்டுகோள்

ADDED : ஜூன் 20, 2025 02:25 AM


Google News
Latest Tamil News
மதுராந்தகம்:கருங்குழியில், பராமரிப்பின்றி உள்ள சிறுவர் பூங்காவை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது.

இதில், 6வது வார்டுக்கு உட்பட்ட விநாயகர் கோவில் குளக்கரை மேல், சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.

சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இருக்கை வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டு, பேரூராட்சி சார்பாக பராமரிக்கப்பட்டு வந்தது.

அதில் அப்பகுதி சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சியுடன் விளையாடி வந்தனர்.

தற்போது, பராமரிப்பின்றி பூங்காவின் உள்பகுதி, வெளிப்பகுதிகளில் செடி, கொடிகள் வளர்ந்து, விளையாட முடியாதவாறு, பூங்கா மறைந்து உள்ளது.

எனவே, பராமரிப்பின்றி உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us