Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கோட்டைக்காடில் புதிதாக பள்ளி கட்டடம் கட்ட கோரிக்கை

கோட்டைக்காடில் புதிதாக பள்ளி கட்டடம் கட்ட கோரிக்கை

கோட்டைக்காடில் புதிதாக பள்ளி கட்டடம் கட்ட கோரிக்கை

கோட்டைக்காடில் புதிதாக பள்ளி கட்டடம் கட்ட கோரிக்கை

ADDED : மே 10, 2025 01:51 AM


Google News
செய்யூர்:கோட்டைக்காடு பகுதியில், புதிதாக பள்ளி கட்டடம் கட்ட வேண்டுமென கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, 1962ல் இருந்து செயல்பட்டு வருகிறது.

கோட்டைக்காடு, வேம்பனுார் போன்ற பகுதியில் வசிக்கும், 20க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்காக, இந்த பள்ளி வளாகம் முழுதும் கையகப்படுத்த அளவீடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான இழப்பீட்டுத் தொகையும், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாற்று இடம் தேர்வு செய்யப்படாததால், புதிய பள்ளி கட்டடம் அமைக்க, தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கோட்டைக்காடு பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றை அமைக்கும் போது, அரசாணையின்படி இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு, 60 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு, செயல் அலுவலர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த இடம் தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே, காலியாக உள்ள இந்த இடத்தில் புதிய பள்ளி கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வலியுறுத்துகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us