/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பயன்பாடற்ற வாகனங்கள் பொது ஏலம் விட கோரிக்கை பயன்பாடற்ற வாகனங்கள் பொது ஏலம் விட கோரிக்கை
பயன்பாடற்ற வாகனங்கள் பொது ஏலம் விட கோரிக்கை
பயன்பாடற்ற வாகனங்கள் பொது ஏலம் விட கோரிக்கை
பயன்பாடற்ற வாகனங்கள் பொது ஏலம் விட கோரிக்கை
ADDED : ஜூன் 26, 2025 09:24 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர் பயன்படுத்திய வாகனங்களை, பொது ஏலம் விட வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது.
வீட்டுமனை பட்டா மற்றும் நிலம் சம்பந்தமான பிரச்னை தொடர்பாக மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அப்பகுதிகளுக்கு வட்டாட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய, வாகனங்கள் வழங்கப்பட்டன.
தற்போது, இந்த வாகனங்கள் மிகவும் பழமையானதால், பயன்பாடின்றி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தற்போது அந்த வாகனங்கள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் தங்குமிடமாக மாறியுள்ளன.
எனவே, பயன்பாடற்ற இந்த வாகனங்களை பொது ஏலம் விட வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.