Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/தலைமையாசிரியர் நியமிக்க கலெக்டரிடம் மனு

தலைமையாசிரியர் நியமிக்க கலெக்டரிடம் மனு

தலைமையாசிரியர் நியமிக்க கலெக்டரிடம் மனு

தலைமையாசிரியர் நியமிக்க கலெக்டரிடம் மனு

ADDED : பிப் 10, 2024 11:03 PM


Google News
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும் என, அப்பள்ளி கல்வி புரவலர் கெஜராஜன், கலெக்டரிடம் மனு அளித்தார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

நெல்லிக்குப்பத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் கடந்த ஜூன் மாதம் தலைமை ஆசிரியர் பணி ஓய்வு பெற்றார். அதன்பின், ஆறு மாதம் ஒருவர் பணியாற்றி மாறுதல் பெற்று சென்றுவிட்டார்.

தற்போது நான்கு மாதம் தலைமை ஆசிரியர் இல்லாமல் உள்ளது.

இதனால் மாணவ - மாணவியரின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இன்னும் சில மாதங்களில் தேர்வு நடைபெற உள்ளதால், தலைமை ஆசிரியர் நியமிப்பது அவசியமானது.

எனவே, தலைமை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us