Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாணவ - மாணவியர் பரிதவிப்பு நெடுமரம் வழியாக பேருந்து இயக்க பயணியர் கோரிக்கை

 மாணவ - மாணவியர் பரிதவிப்பு நெடுமரம் வழியாக பேருந்து இயக்க பயணியர் கோரிக்கை

 மாணவ - மாணவியர் பரிதவிப்பு நெடுமரம் வழியாக பேருந்து இயக்க பயணியர் கோரிக்கை

 மாணவ - மாணவியர் பரிதவிப்பு நெடுமரம் வழியாக பேருந்து இயக்க பயணியர் கோரிக்கை

ADDED : டிச 01, 2025 02:34 AM


Google News
செய்யூர்: செய்யூர் - கல்பாக்கம் இடையே நெடுமரம் வழியாக, அரசு பேருந்து இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்பாக்கம் பணிமனையில் இருந்து டி-2 எண் கொண்ட அரசு பேருந்து செய்யூர் - கல்பாக்கம் இடையே இயக்கப்படுகிறது. செய்யூரில் இருந்து புறப்படும் டி-2 பஸ் பெரும்பாக்கம், ஆக்கினாம்பட்டு, நெல்வாய்பாளையம், மலையூர், கூவத்துார் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக கல்பாக்கம் சென்றடைகிறது.

இந்த பஸ்சில் தினந்தோறும், ஏராளமான பயணியர் பயணம் செய்கின்றனர். குறிப்பாக நெடுமரம், கரிக்கமலை, வேட்டகாரக்குப்பம் சாலை வழித்தடத்தில் பேருந்து வசதிகள் ஏதுமில்லை. இதனால், பள்ளி மாணவர்கள், அப்பகுதி மக்கள் பேருந்து வசதிகளின்றி, இருசக்கர வாகனம் மற்றும் ஷேர்ஆட்டோக்களில் கூவத்துார், பவுஞ்சூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அவலம் நீடிக்கிறது.

மேலும், பள்ளி மாணவ - மாணவியர் கூவத்துாரில் உள்ள அரசு பள்ளிக்கு காலை நேரத்தில், நடந்தே செல்கின்றனர். அதே போன்று, பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு செல்லும்போது இருட்டி விடுவதால் மாணவ - மாணவியர் அச்சப்படுகின்றனர்.

எனவே, பள்ளி மாணவர்களின் நலன்கருதி, டி-2 பஸ்சை கூவத்துாரில் இருந்து நெடுமரம், கருக்காமலை, ஆக்கினாம்பட்டு வழியாக இயக்கவும்; இல்லாவிடில், கொடூர் - கூவத்துார் இடையே சிற்றுந்து இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்களும், பயணியரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us